|
நீதிக் கிளையின் மூலம் இடம் பெறும் கடமைகள்
நீதிக் கிளையின் மூலம் பின்வரும் மூன்று பிரிவுகளாக கடமைகள் இடம் பெறுகின்றன.
- அடையாள அட்டை பெற்றுக் கொள்ளும் விண்ணப்பங்கள் தொடர்பில் சட்ட நடவடிக்கைகள்.
- திணைக்களத்தினால் வழங்கப்படுகின்ற அடையாள அட்டைத் தொடர்பிலான உறுதிப்படுத்தும் கடிதங்களை விநியோகித்தல்.
- விநியோகிக்கப்பட்ட ஆள் அடையாள அட்டை சம்பந்தமான சட்ட சிக்கல்களைத் தீர்த்தல்.
1. அடையாள அட்டை பெற்றுக் கொள்ளும் விண்ணப்பங்கள் தொடர்பில் சட்ட நடவடிக்கைகள்.
தேசிய அடையாள அட்டை பெற்றுக் கொள்வது சம்பந்தமாக பொதுமக்களினால் இத்திணைக்களத்திற்கு சமர்ப்பிக்கப்படுகின்ற விண்ணப்பப்படிவங்கள் மற்றும் ஆவணங்கள் தொடர்பிலும், அவற்றில் குறிப்பிடப்பட்டுள்ள தரவுகள் தொடர்பில் நம்பகமற்ற தன்மை ஏற்படுகின்ற சந்தர்ப்பத்தில் அவ்வாறான விண்ணப்பங்கள் நீதிக்கிளைக்கு சமர்ப்பிக்கப்படும். அவ்வாறான சந்தர்ப்பங்கள் கீழ் வருமாறு.
- விண்ணப்பப்படிவத்துடன் இணைக்கப்பட்டுள்ள பிறப்பு அத்தாட்சிப் பத்திரம் போலியானதாக காணப்படுதல்.
- திருத்தத்திற்குரிய விண்ணப்பப்படிவத்துடன் இணைக்கப்பட்ட அடையாள அட்டையானது, திணைக்களத்தினால் இறுதியாக விநியோகிக்கப்பட்ட அடையாள அட்டையாக இல்லாதிருத்தல்.
- விண்ணப்பதாரிக்கு இதற்கு முன்னர் ஓர் அடையாள அட்டை விநியோகிக்கப்பட்ட போதிலும் அதுபற்றி வெளிப்படுத்தாது மீண்டும் முதற்தடவைக்கான விண்ணப்பப்படிவம் மூலம் விண்ணப்பித்தல்.
- விண்ணப்பப்படிவத்தில் குறிப்பிடப்பட்ட தரவுகள் திணைக்களத்தின் அறிக்கையுடன் முரண்பட்டு காணப்படல்.
- விண்ணப்பப்படிவத்துடன் போலி ஆவணங்கள், போலியான தரவுகளை சமர்பிக்கின்ற சந்தர்ப்பங்களில், அவ்விண்ணப்பப்படிவத்தினை நீதிக்கிளையில் நிறுத்திவைத்திருப்பதுடன், அப்பிரச்சினை தொடர்பில் உண்மையான காரணங்களை எமக்குத் தெரியப்படுத்துமாறு குறிப்பிட்டு, விண்ணப்பத்தில் உள்ள முகவரிக்கு விண்ணப்பதாரிக்கு கடிதம் மூலம் தெரிவிக்கப்படும். விண்ணப்பதாரரினால் முன்வைக்கப்படும் வெளிப்படுத்துகையை ஏற்றுக் கொள்ளக்கூடிய ஒன்றாக உறுதிப்படுத்தப்படும் சந்தர்ப்பத்தில், அது தொடர்பிலான சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட பின்னர் விண்ணப்பப்படிவமானது மேலதிக நடவடிக்கைகளுக்காக உரிய கிளைக்கு அனுப்பி வைக்கப்படும். அவ்வாறல்லாத சந்தர்ப்பத்தில் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக பொலிஸ் திணைக்களத்திற்கு அனுப்பிவைக்கப்படும்.
- முதற் தடவை பெற்றுக் கொண்ட அடையாள அட்டையினை சிதைவுகளுக்கு உட்படுத்தி முன்வைத்தல்.
- போலியான தகவல்களை முன்வைத்து பல அடையாள அட்டைகளை தம்வசம் வைத்திருத்தல்.
- அடையாள அட்டை பெற உரித்துடைய நபரை அதனைப் பெற்றுக் கொள்வதிலிருந்து தடை செய்தல்.
|
|