![]() |
||
இலத்திரனியல் தேசிய அடையாள அட்டைக் கருத்திட்டம்தேசிய பிரஜைகள் தரவுக் கட்டமைப்பில் இலத்திரனியல் தேசிய தரவு மையம் ஒன்றினை உருவாக்கி இலத்திரனியல் தேசிய அடையாள அட்டையை விநியோகிக்கின்ற ஒரே ஒரு அதிகாரம் பெற்ற நிறுவனமாக ஆட்களைப் பதிவு செய்யும் திணைக்களம் விளங்குகின்றது. 1968 ஆம் ஆண்டின் 32 ஆம் இலக்க ஆட்களைப் பதிவு செய்யும் சட்டத்தினால் மற்றும் 1971 ஆம் ஆண்டு அதற்காக அமைக்கப்பட்ட ஒழுங்கு விதிகளினால் மற்றும் அதன் சட்டபூர்வ நிலைமைகளில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களின் மூலம் அமுலாக்கம் பெற்றுள்ளது. அதற்கிணங்க நம்பகமான முறையில் இலங்கைப் பிரஜையினை அடையாளம் காண்பதற்காக, 15 வயதிற்கு மேற்பட்ட பிரஜைகளின் உயிரியல் தரவுகள், அவர்களின் உயிரியல் பண்பான விரல் அடையாளம், சர்வதேச சிவில் விமான சேவை அமைப்பின் (International Civil Aviation Organization – ICAO) தரத்திற்கமைய பெற்றுக் கொள்ளப்பட்ட அந்நபர்களின் புகைப்படங்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களின் தகவல்களைப் பெற்றுக் கொண்டு, தேசிய பிரஜைகள் தரவுக் கட்டமைப்பில் இலத்திரனியல் தேசிய தரவு மையம் ஒன்றினை உருவாக்கி அதனூடாக உரிய வயதினை அடைந்த பிரஜைகளை அடையாளம் கண்டு, இலத்திரனியல் தேசிய அடையாள அட்டையினை குறுகிய காலத்தினுள் விநியோகித்து, மக்களின் அன்றாடத் சேவைகளை இலகுவில் பெற்றுக் கொள்வதற்கும், தேசிய பாதுகாப்பு மற்றும் நாட்டின் அபிவிருத்தியினை துரிதப்படுத்துவதற்கு வசதிகளை ஏற்படுத்துதல் இக் கருத்திட்டத்தன் கீழ் இடம் பெறுகிறது.
இலத்திரனியல் தேசிய அடையாள அட்டையினை விநியோகிப்பதன் தேவைப்பாடு.
|
||
கருத்திட்டத்தின் நோக்கம்.
இலத்திரனியல் தேசிய அடையாள அட்டை மூலம் மக்கள் அடையும் நன்மைகள்
அதன்படி இலத்திரனியல் தேசிய அடையாள அட்டை ஒன்றினை விநியோகிப்பதன் ஊடாக இந்நாட்டுப் பிரஜைகளின் மனித, சமூக, பொருளாதார, அரசியல் மற்றும் சட்டபூர்வ உரிமைகளைப் பாதுகாக்கும் வகையிலும் தங்களுடைய சேவைகளை நிறைவேற்றும் பொருட்டு ஆள் அடையாளத்தினை சரியான முறையில் உறுதிப்படுத்துவது இவ் அடையாள அட்டை மூலம் மிகவும் சரியான முறையில் இடம்பெறும்.
தேர்தல் காலங்களில் வாக்களிப்பதற்கு, வங்கி நடவடிக்கைகள், சாரதி அனுமதிப் பத்திரம், கடவுச் சீட்டு, உள்நாட்டு வெளிநாட்டு தொழில் வாய்ப்புக்கள், ஊழியர் சேமலாப நிதி, காப்புறுதி, காணி மற்றும் சொத்துக்கள், ஓய்வூதியமாகிய சேவைகளைப் பெற்றுக் கொள்கையில் தங்களுடைய ஆள் அடையாளத்தை சரியான முறையில் உறுதிப்படுத்துவதற்கு முடியுமாக இருத்தல். அத்தரவுகளை குறித்த நிறுவனங்களுடன் சட்டபூர்வ தரவு பரிமாற்றல் தளத்தினூடாக இணைப்புச் செய்வதன் மூலம் அடையாள அட்டை இல்லாத பொழுது தங்களுடைய சேவைகளை எவ்வித பாதிப்புமின்றி பெற்றுக் கொள்ள கூடியதாக இருப்பது பிரஜைகளுக்குக் கிடைக்கின்ற பாரிய நன்மை ஆகும்.
தனிநபர் ஆள் அடையாளத்தினை சூழ்ச்சியான முறையில் உறுதிப்படுத்தி மேற்கொள்ளப்படும் மேசாடிகள், ஊழல்கள், முறைகேடுகள் ஆகிய சமூக விரோத செயல்களை மிகவும் சூட்சகமான முறையில் கட்டுப்படுத்த முடிவதோடு,வேறு எந்தவொரு நபரிற்கும் உங்களுடைய பெயரில் தோன்றுவதற்கோ அல்லது உங்களது வரப்பிரசாதங்களைப் பெற்றுக் கொள்ள முடியாமல் போவதனால், சரியான நபரிற்குத் தரமான சேவையினை தடைகளின்றி வினைத்திறனாகப் பெற்றுக் கொள்ள முடியும். அத்துடன் இடர் போன்ற அவசர நிலைமைகளின் போது அடையாள அட்டை இல்லாமல் இருப்பினும் உங்களுடைய ஆள் அடையாளத்தனை உறுதிப்படுத்தக் கூடியதாக இருப்பதன் ஊடாக பிரஜைகளின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும்.
உரித்துடைய இலங்கைப் பிரஜைகளின் மற்றும் அந்நபர்களின் குடும்ப உறுப்பினர்களின் தரவுகளை உள்ளடக்கி தேசிய பிரஜைகள் தரவுக் கட்டமைப்பினூடாக இலத்திரனியல் தேசிய தரவு மையம் ஒன்றினை உருவாக்கி தங்கள் குடும்ப உறுப்பினர்களின் தரவுகளை வேண்டிய ஒரு சந்தர்ப்பத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்ட நிறுவனங்களுக்கு மிகவும் நம்பகமான முறையில் உடனடியாக உறுதிப்படுத்த முடியுமாக இருத்தல்.
தேசிய தனிநபர் தரவு மையத்தினூடாக தேசிய பாதுகாப்பிற்கு மற்றும் நாட்டின் அபிவிருத்திக்கு ஏதுவாக அமையும் நிறுவனங்களுடன் தரவுப் பரிமாற்றம் செய்யக் கூடியதாக இருப்பதனால் தேசிய பாதுகாப்பினை உறுதிப்படுத்தல் மற்றும் நாட்டின் பொருளாதார அபிவிருத்தியினைத் துரிதப்படுத்துவதற்கான வசதிகளை ஏற்படுத்துவதன் ஊடாக வளமான தேசியத்தைக் கட்டியெழுப்பக்கூடியதாக இருத்தல். மேற்குறிப்பிட்ட அடையாள அட்டை விநியோகிக்கும் பழைய முறைமை மற்றும் இடைக்காலத்தில் இரு மொழிகளில் வழங்கப்பட்ட அடையாள அட்டைகளில் காணப்பட்ட பிரச்சினைகள் மற்றும் பலவீனங்களை தவிர்த்துக் கொள்வதற்கு ஆட்களைப் பதிவு செய்யும் திணைக்களமானது முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. அதனூடாக மேற்கூறப்பட்ட இரண்டு முறைமைகளிலும் ஏற்பட்ட பிரச்சினைகள் மற்றும் பலவீனங்களைத் தவிர்த்து நபர்களை துல்லியமாக அடையாளம் காணக்கூடிய நம்பகத் தன்மையாக ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்துகின்ற அடையாள அட்டையினை விநியோகிக்கின்ற சந்தர்ப்பத்தினை ஏற்படுத்தல்.
2011.08.17 ஆம் திகதி முதல் 2015.10.07 ஆம் திகதி வரையான கருத்திட்டத்தின் பின்னணி.
2015.10.07 ஆம் திகதியின் பின்னரான கருத்திட்டத்தின் சமகால பின்னணி.
ஆரம்பம் முதல் 2015.10.31 ஆம் திகதி வரை இலத்திரனியல் தேசிய அடையாள அட்டைக் கருத்திட்டத்தின் அடிப்படை முன்னேற்றம்.
இலத்திரனியல் தேசிய அடையாள அட்டை விநியோகிப்பதற்கு ஏதுவாக மாகாணக் காரியால/ பிரதேச செயலகங்களில் ஆட்களைப் பதிவு செய்யும் திணைக்களத்தின் பிரிவு/ பிரதான அலுவலகம் மறுசீரமைக்கப்படுதல், உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தல் மற்றும் அலுவலகப் பணிக்குழுவிற்கு ஆட்சேர்த்துக்கொள்ளல் மற்றும் பயிற்சிகளை வழங்குதல் ஆகிய நடவடிக்களை மேற்கொள்ளப்பட்டமை.
|