மாகாண அலுவலகம் - மத்திய

ஆட்களைப் பதிவு செய்யும் திணைக்களத்தின் மத்திய மாகாண அலுவலகம் 2024.02.22 ஆந் திகதி இல. 95/26/A, லேடி மெக்கலம் வீதி, ஹாவா எளிய, நுவரெலியா எனும் இடத்தில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் கௌரவ.டிரான் அலஸ் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.

சேவையின் கீழ் நுவரெலியா, கண்டி மற்றும் மாத்தளை மாவட்டங்களின் பிரதேச செயலக அலுவலகங்களுக்கு அனுப்பப்படும் அனைத்து விண்ணப்பங்களுக்குரிய தேசிய அடையாள அட்டைகளை தயாரிக்கும் செயல்முறையின் அடிப்படை நடவடிக்கைகள் இந்த அலுவலகத்தின் மூலம் மேற்கொள்ளப்படுகிறது. மேலும், அந்த விண்ணப்பங்கள் தொடர்பான விசாரணைகள் மற்றும் தேசிய அடையாள அட்டை தொடர்பான பிற சேவை தேவைகளும் இந்த அலுவலகத்தின் மூலம் மேற்கொள்ள முடியும்.

மேலும், மத்திய மாகாணத்தின் சகல பிரதேச செயலகங்களிலும் நிறுவப்பட்ட ஆட்களைப் பதிவு செய்யும் பிராந்திய அலுவலகங்களின் மேற்பார்வை, வசதிகளை ஏற்படுத்தி கொடுத்தல் மற்றும் நடமாடும் சேவைகளை நடத்துதல் உட்பட அனைத்து உத்தியோகபூர்வ நடவடிக்கைகளும் மத்திய மாகாண அலுவலகத்தின் மூலம் நிர்வகிக்கப்படுகின்றன.

பிரதி ஆணையாளர்
AC-Kurunegala
  பெயர்:
  தொ.இல. : 0115226175
  தொலைநகல்:
  மின்னஞ்சல் :