தென் மாகாண அலுவலகம்

ஆட்களைப் பதிவு செய்யும் திணைக்களத்தின் தென் மாகாண அலுவலகம் 06.09.2019 அன்று நிறுவப்பட்டதுடன் பத்தரமுல்லையில் உள்ள பிரதான அலுவலகத்தைத் தவிர, தென் மாகாண அலுவலகம் ஒரு நாள் சேவையில் அடையாள அட்டைகளை வழங்கும் ஒரே மாகாண அலுவலகமாகும்.

தேசிய அடையாள அட்டைகள் சாதாரண சேவையின் கீழ் வழங்கப்படுவதுடன், தேசிய அடையாள விண்ணப்பிப்பவர்களின் வசதிக்காக ஒரு நாள் சேவை மூலமும் தேசிய அடையாள அட்டைகளும் இந்த அலுவலகத்தினால் வழங்கப்படுகின்றது. ஒரு நாள் சேவையின் கீழ், தேசிய அடையாள அட்டைகளைப் பெற விரும்பும் விண்ணப்பதாரர்கள் முன்பதிவு செய்த நாளில் பிரதேச செயலகத்திற்கு வந்து உரிய சேவையைப் பெற முடியும்.
இவ்வாறு வரும் விண்ணப்பதாரர்களுக்கு காலை 7.30 மணி முதல் டோக்கன் வழங்கப்படும். மேலும், தென் மாகாணம் காலி, மாத்தறை, ஹம்பாந்தோட்டை ஆகிய 03 மாவட்டங்களில் உள்ள சுமார் 758 பாடசாலைகளில் பாடசாலை விண்ணப்பதாரிகளுக்கு அடையாள அட்டை அல்லது இலக்கத்தை உறுதிப்படுத்தல் கடிதங்கள் வழங்கல், தலைமை அலுவலகத்தின் நீதிக் கிளை, இலக்கங்களை உறுதிப்படுத்தும் போன்றவற்றிலிருந்து பெற எதிர்பார்க்கப்படும் ஏனைய சேவைகள் தொடர்பான விசாரணைகளை இந்த அலுவலகத்திலிருந்து பெற்றுக்கொள்ள முடியும்

உதவி ஆணையாளர்
...
  பெயர்: திரு. எம்.எல்.ஏ. சஞ்சீவ
  தொ.இல:091 2228348
  தொலைநகல்: 091 2228349
  மின்னஞ்சல் : ac_galle@drp.lk